BREAKING NEWS

கடலூர் மாவட்டத்தில் மருந்து கடைகளுக்கு நிபந்தனை; இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தல்.

கடலூர் மாவட்டத்தில் மருந்து கடைகளுக்கு நிபந்தனை; இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தல்.

– செய்தியாளர் கொ.விஜய்.

 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அறிவுறுத்தல் படி மாவட்டம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் சைகோட்ரோபிக் மருந்துகளின் உள்ளடக்கம் கொண்ட சில மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தாளுனர்கள் விற்பனை செய்யக்கூடாது என்று விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் வேப்பூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வேப்பூர், நல்லூர் போன்ற பகுதிகளில் மருந்து கடைகள் வைத்திருக்கும் மருந்தாளுனர்களை அழைத்து மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் குறிப்பிட்ட சில மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு மீறி விற்பனை செய்யும் மருந்தாளுனர்கள் மீதும் மருந்து கடை மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார்.

 

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )