BREAKING NEWS

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

கடந்த ஒரு வார காலமாக தமிழக முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை அனைத்து மதத்தவரும், சமூக ஆர்வலர்களும் சமத்துவ பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள என் எஸ் கே கலைவாணர் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் பெண்களுக்கான கோலப் போட்டிகளை நடத்தி வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

 

 

அப்படியாபெண்களுக்கான கோலப் போட்டி ஆண்களுக்கான பானை உடைத்து போட்டி மற்றும் சிறுவர்களுக்கான இசை நாற்காலி போன்ற போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

விழாவினை மன்ற தலைவர் அன்பழகன் மற்றும் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.

 

இந்த விழாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.

 

CATEGORIES
TAGS