கம்பம் அருகே 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு.
கம்பம் அருகே 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் கடந்த பத்து நாட்களாக தண்ணீர் வரை வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சுருளி அருவி தேனி மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தண்ணீர் திறந்து விடப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
CATEGORIES தேனி