கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை லாரிகளில் அள்ளிச் செல்வது தொடர்பாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கயத்தாறு கடம்பூர் சாலையில் உள்ள பைனான்சியர் அய்யாதுரையின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.
கார் தீப்பற்றி எரிவதை அறிந்த அய்யாத்துரை குடும்பத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர் இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திமுக பிரமுகர் குருராஜின் ஆதரவாளர் மந்திரமூர்த்தி என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. தலைமறைவான மந்திர மூர்த்தி உள்ளிட்ட சிலரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே தன்னை சிலர் தாக்கி காயப்படுத்தியதாக மந்திரமூர்த்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சற்று நேரத்துக்கு முன்பு உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த அவரிடம் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.