BREAKING NEWS

கரூர் அருகே ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கரூர் அருகே ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் தென்பாகம் கிராமம், வேடிச்சிப்பாளையத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக 7 ம் தேதி காலை காவிரியில் தீர்த்தம் அழைத்தல் நிகழ்ச்சியும், கணபதி வழிபாடு, கணபதி ஹோமத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல் கால யாக பூஜை, இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் தொடர்ந்து கன்னிகா பூஜை, கோ பூஜையுடன் நிகழ்ச்சிகள் கோலகலமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.

பின்னர், யாக பூஜைகளை தொடர்ந்து புனித காவிரி நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து கலசங்களுக்கு மஹா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டு ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )