BREAKING NEWS

கலவை அருகே டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி குடும்பப் பிரச்சினையால் மது போதையில் தற்கொலை செய்து கொண்டார்.

கலவை அருகே டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி குடும்பப் பிரச்சினையால் மது போதையில் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சனையால் வாலிபர் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த சென்னசமுத்திரம் ரோட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி செய்து வந்தார். கடந்த 2020 ஆண்டு நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சிந்துவுக்கும் பெரியவர்கள் திருமணம் திருமணம் செய்து வைத்தனர்.

 

இவர்களுக்கு ஒரு வயது, இரண்டு வயது என 2 மகன்கள் உள்ளனர். அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.தொடர்ந்து இரண்டு நாட்களாக சாப்பிடாமல் மது குடித்து வந்துள்ளார். நேற்று வேலைக்கு செல்லாமல் மது குடிக்க ஆரம்பித்ததால் மதியம் 2:30 மணி அளவில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வெளியே போக வேண்டாம் என ரூமுக்குள் உள்ளே விட்டு வெளிய தாப்பால் போட்டுள்ளார்.

 

சிறிது நேரம் கத்திக் கொண்டே இருந்துள்ளார். பின்னர் நேற்று மாலை 6:00 மணி அளவில் கதவின் தாப்பலை திறந்து உள்ளார். அப்போது மணிகண்டன் உள்தாபால் போட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பலமுறை கதவை தட்டிப் பார்த்தும் திறக்கப்படாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது மணிகண்டன் சுயநலவையின்றி இருந்துள்ளார்.

 

கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தில் இருந்து அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிகண்டன் கழுத்தில் துண்டை (டவல்) சுற்றிக்கொண்டு சுயநினைவின்றி இருந்தவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

இதுகுறித்து மணிகண்டன் மனைவி சிந்து, கலவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

CATEGORIES
TAGS