BREAKING NEWS

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி உறையூர் மேல்நிலைப் பள்ளியில் பகுதிச் செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

 

இந்த முகாமில் பொது மருத்துவம், கண், இதய பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், போன்ற நோய்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், பகுதிச் செயலாளர் இளங்கோ, மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS