கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார்.
நிகழ்வில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அவர்களும், வட்டார மருத்துவர் அவர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை அவர்களும்,
ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும், கிளைக் கழகச் செயலாளர்களும், பொதுமக்களும் முகாமில் பெருமளவில் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS அரசியல்கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார்சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகமானாமதுரை ஒன்றியம்வெள்ளிக்குறிச்சி கிராமம்