BREAKING NEWS

கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாம் ஆண்டு விழா அன்னை சத்திய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாம் ஆண்டு விழா அன்னை சத்திய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

தஞ்சாவூர் பாரதி இளையோர் நற்பணி மன்றம் மற்றும் இந்திய அரசு நேரு யுவகேந்திராவுடன் இணைந்து கலைப்புயல் சிலம்பாட்டப் பயிற்சிப்பள்ளி சார்பில் இரண்டாம் ஆண்டு விழா அன்னை சத்திய உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

 

 

இதில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இந்திய குழந்தைகள் நல சங்க அதிகாரி டென்னிஸ் மேரி வரவேற்புரை ஆற்றினார்.

 

இந்தியன் ரெட் கிராஸ் சோஸிட்டி பொருளாளர் முத்துக்குமார் ஆசான்களுக்கான விருதுகளை வழங்கினார். இந்திய குழந்தைகள் சங்கம் கவுரவ செயலாளர் ரகுராமன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

 

சிறந்த நாடக நடிகருக்கான விருதை திருவாரூரை சேர்ந்த அன்பழகனுக்கும், சிறந்த நாடக நடிகைக்கான பட்டத்தை விஜயலட்சிக்கு மேயர் வழங்கினார்.

 

 

பின்னர் சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பம் சுற்றி பார்வையார்களை கவர்ந்தனர். மேலும் இந்நிகழ்வில் சிலம்பாட்ட நிறுவனர், பயிற்சியாளர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )