BREAKING NEWS

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் மாலை 4.00 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாள களந்தை மீராசா வரவேற்று பேசினார்.

 

மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித், மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட பொருளாளர் இளையாராஜா, செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷபி, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில், ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

 

 

கூட்டத்தில் கிழக்கண்ட் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது வருகின்ற 18-12-22 அன்று சேரன்மகாதேவியில் வைத்து நடைபெறும் மாவட்ட பொதுக்குழுவிற்கு வருகை தர இருக்கும் மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்ப்பை அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

 

களக்காடு புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் உப்பாறு 12 அடி பாதையை மீட்டெக்க அதிகாரிகளுக்கு பதிவு தபால் மூலம் அனுப்பியும் இது வரை நடவடிக்கை எடுக்காத நிலையில் துணைபோகும் அதிகாரிகள் மீது பொதுநல வழக்கு தொடர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் எம்.எஸ்.சிராஜ் நன்றியுரையாற்றினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )