BREAKING NEWS

கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்ற இரு பெண்கள் கைது.

கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்ற இரு பெண்கள் கைது.

 

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கள்ளத்தம்மா மதுபானம் பதுக்கி விற்பதாக தகவலின் பெயரில் ஏற்காடு ஒண்டிக்கடை கிராமத்தை சேர்ந்த ராமு. மனைவி சசிகலா (வயது 40).

 

மேலும் கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மலர்கொடி வயது(62)அப்பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதாக டி.எஸ்.பி. தையல் நாயகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சிறப்பு போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஒண்டிக்கடை சசிகலா 35மதுபாட்டில்கள் வைத்தி ருப்பது தெரியவந்தது. 

 

 

அதேபோல் மலர்கொடி15 மது பாட்டில்கள் வைத்திருப்பது அறிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

டிஎஸ்பி தையல்நாயகி நம்மிடம் தெரிவிக்கும்பொழுது புறங்களில் மட்டுமல்லாது ஏற்காடு டவுன் பகுதியில் மதுப்பிரியர்களை குறி வைத்து கள்ளத்தனமாக மது பாட்டில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கபப்டும்.

 

மேலும் வருமானம் இல்லாத நிலையிலும் கூலி தொழிலாளர்கள் பலர் அதிக விலைக்கு இந்த மது பாட்டில்களை வாங்கி, தங்களிடம் இருந்த பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் பலர், மனைவியிடம் சண்டை போட்டு வீட்டில் உள்ள பாத்திரங்களையும்,

 

நகைகளையும் அடமானம் வைத்து குடிக்கும் அளவிற்கு மதுப்பிரியர்களின் நிலை மாறியுள்ளது. மது குடித்த சிலர் குடும்பத்தில் தகராறு செய்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

 

இது ஏற்காட்டில் தொடர்கதையாகி வருகிறது. ஏற்காடு முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் கள்ளத்தனமாக அரசு மதுபானம் பதுக்கி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )