காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார் வயது 29. இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து அப்பகுதியிலேயே தங்கி வந்துள்ளார்.
இவர் கடந்த நாலாம் தேதி பணி முடித்து வீடு திரும்பவில்லை என இவரது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.
மேலும் இவரது உறவினர் ஒருவர் காவல் துறையில் பணிபுரிவதால் அவரது உதவியை நாடி அவரது செல்போன் எண் கொண்டு தேடிய நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பிப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி சிக்னல் விவரங்கள் தெரியவந்தது.
இதனை எடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தேடி வந்த நிலையில் அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மீண்டும் அந்தக் காவல் எல்லையான பாலு செட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் பாலமுருகனை தொடர்பு கொண்டு இது குறித்த விவரங்கள் தெரிவித்த பின் காஞ்சி மாவட்ட காவல்துறை சார்பில் செல்போன் எண்ணினை மீண்டும் சிக்னல் தேடப்பட்ட போதும் அப்பகுதியை காட்டிய போது அந்த இடத்தில் பாழடைந்த உபயோகமில்லாத கிணறு ஒன்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் நிறைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உபயோகமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு கிணற்றில் இறங்கும்போது ஏதேனும் விஷவாயு தாக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டதின் பேரில் அது குறித்த சோதனையை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டனர்.
இதில் அச்சம் கொள்ளும் வகையில் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின் ஒரு மணி நேரம் போராடி அருண்குமாரின் சடலத்தை மீட்டு காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
உடலைப் பெற்றுக் கொண்டு பாலு செட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் இளைஞரின் மரணம் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த அருண்குமாரின் செல்போன் மற்றும் நண்பர்கள் வட்டம் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரேத பரிசோதனைக்கு பின் இளைஞரின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் விசாரணை துரிதமாக நடைபெறும் எனவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
உபயோகமற்ற கிணற்றில் இளைஞர் சடலம் மீட்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் அச்சத்துடன் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.