காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன். இவர் ராஜபாளையம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வாழைத்தோப்பு மற்றும் வேர்கடலை பயிரிட்டுள்ளார். வாழைத்தோப்பைக் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் தோட்டத்தைச் சுற்றி அவர் மின்வேலி அமைத்துள்ளார். இந்த வாழைத்தோப்பிற்கு வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் காவலாளியாக இருந்து வருகிறார்.