BREAKING NEWS

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் வயது 10. இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இன்று ஜெகன்நாத் தனது நண்பர்களுடன் பர்மா காலனியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மீன் பிடித்து விளையாட சென்றுள்ளார். அப்போது அவரது காலணி ஒன்று கிணற்றில் விழுந்து விடவே, அதனை எடுக்கும் முயற்சியில் கிணற்றில் ஜெகநாத் இறங்கியுள்ளார்.

 

 

அப்போது எதிர்பாராத விதமாக ஜெகன்நாத் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட உடன் சென்ற நண்பர்கள் கூச்சலிடமே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கண்டோன்ட்மென்ட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

 

CATEGORIES
TAGS