கர்நாடக மாநில காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரைத் தீவிரமாகத் தேடிவந்தனர். அடுத்த சில தினங்களில் பாபுவின் செல்போன் எண்ணில் புதிய சிம்கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து செல்போன் டவர் மூலமாக, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த செல்போன் பயன்படுத்தியவரைச் சுற்றி வளைத்தனர். ஆனால் வேறொரு நபர் அந்த செல்போனை பயன்படுத்துவது தெரிந்தது. காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் சாலையில், கண்டெடுத்த செல்போனை அவர் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து தலைமறைவாக இருக்கும் நாகேஷை கைது செய்யும் படி காவல் துறையினருக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது. இந்நிலையில் அவர் திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர். திருவண்ணாமலையிலுள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் சாமியார் கோலத்தில் தங்கியிருந்த நாகேஷ், பெங்களூரு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.