கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.

தேனி செய்தியாளர் விவேக்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அர்ச்சகரையும் இந்து மக்களையும், திமுகவினர் அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர்.
இந்து சமய அறநிலையத்துறை அலுவலரிடம் முறையிட சென்ற நிலையில் அங்கு இருந்த இணை ஆணையாளர் தங்களை அவமதித்ததாக கூறி தென்கரை மாரியம்மன் கோவில் முன்பு இணை ஆணையாளரை கண்டித்து அவரது காரை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிபாஸ் மற்றும் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்,தங்களை அவமதித்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். பின்பு கலைந்து சென்றனர். இதனால் மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES தேனி
TAGS Dmkஅரசியல்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்தேனிகைலாசநாதர் மலைக்கோவில்பாஜகபெரியகுளம்