BREAKING NEWS

காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஆட்டோ ஓட்டுநர்!

காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஆட்டோ ஓட்டுநர்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

தற்போது வேலூர் தொரப்பாடி அடுத்த சித்தேரி பகுதியில் பெரியார் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் டி.என். 23 cc 33 21 என்ற ஆட்டோவை ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவரது செல்போன் எண் 95 14 0 45 163. இவர் தனது ஆட்டோவில் விபச்சார அழகிகளை ஏற்றிக்கொண்டு வேலூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர் மற்றும் தார்வழிச் சாலை, அரியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பண முதலைகள் முதல் பல்வேறு தரப்பட்ட நபர்களுக்கு விருந்து வைத்து இவர் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்.

இவரது செல்போனை வாங்கிப் பார்த்து அவர் எங்கெங்கு பேசுகிறார்? யார் யாரிடம் பேசுகிறார் என்னென்ன பேசியுள்ளார் என்பதை அறிந்து கொண்டால் இதில் உள்ள உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி விபச்சாரத்திலேயே கொடி கட்டி பறக்கும் இவர் காவல்துறை அதிகாரிகளையும் தனது பிடியில் வைத்துக் கொண்டு அவர்களுக்கும் இளம் மொட்டுக்களை தொழிலுக்கு வரும் புதிய இளம் பெண்களை அனுப்பி விட்டு இவர் தப்பித்து வருகிறார்.

அத்துடன் இனிப்பகங்களில் இனிப்புகளை அடுக்கி தரும் அட்டைப் பெட்டிகளில் பணத்தை வைத்து ஏதோ ஸ்வீட் பாக்ஸ் தருவது போல மாமூல் பணத்தை வழங்கிவிட்டு ஒன்றுமே தெரியாதவர் போல நடந்து கொள்கிறார்.

இதற்கும் மேலாக தனக்கு கவசம் போல இருப்பது இவர் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று சொன்னால் அது மிகையாகாது. கர்ணனுக்கு எப்படி குண்டல க வசமோ அதுபோல இந்த கிருஷ்ணமூர்த்திக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு பின்புலமாக செயல்படுகிறது என்று சொல்லலாம்.

இப்படி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டு இவர் வலம் வந்து கொண்டுள்ளார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. அத்துடன் வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்த தேவசகாயம் என்பவருக்கு ரூபாய் 2 லட்சம் கொடுக்க வேண்டும்.

அதையும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்தார் கிருஷ்ணமூர்த்தி. இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தேவசகாயத்தை சாமர்த்தியமாக வழக்கில் சிக்க விட்டு அவரை சிறைக்கு அனுப்பிவிட்டு அதில் குளிர் காய்ந்து விட்டார் இந்த கிருஷ்ணமூர்த்தி என்று சொல்கின்றனர் நன்கு விஷயம் அறிந்த நடுநிலையாளர்கள்.

சில காவல்துறை அதிகாரிகளும் இந்த தகவலையே உறுதியாக கூறுகின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக முன்னர் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் என்பவரும் இந்த தகவலையே உறுதியாக கூறுகிறார்.

இந்நிலையில் வேலூர் தெற்கு காவல் நிலையம், வேலூர் பாகாயம் காவல் நிலையம், அரியூர் காவல் நிலையம்,வேலூர் கிராமிய காவல் நிலையம் (கணியம்பாடி )ஆகிய பகுதிகளில் அந்தந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இவர் சுதந்திரமாக தனது ஆட்டோவில் விபச்சார தொழிலை செய்து வருவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் அடிக்கடி தனக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி கேட்ட தேவ சகாயத்தின் குடும்பத்தை பிரித்து அவர் மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோரை நிரந்தரமாக பிரித்து அவர்களை நிற்கதி ஆக்கி அவர்களது குடும்பத்தில் விளையாடி வருகிறார் இந்த ஜெகஜால கில்லாடி ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்தி என்று இவரால் பாதிக்கப்பட்ட தேவ சகாயம் கூறி புலம்பி வருகிறார்.

ஆனால் இன்றுவரை தேவ சகாயத்துக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை. காவல்துறையை தொடர்ந்து நம்பி பல்வேறு புகார் மனுக்களை கொடுத்து கொடுத்து மனம் நொந்தது தான் மிச்சம் என்று சொல்கிறார் இந்த அப்பாவி தேவ சகாயம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

காவல்துறையில் சற்று கருணை உள்ளம் கொண்ட ஒரு சில காவல்துறை அதிகாரிகளே தேவ சகாயத்தின் கூற்றில் உண்மை இருப்பதை அறிந்து கொண்டு அவருக்கு உதவ முன் வருகின்றனரே தவிர ஆனால் இன்று வரை அவருக்கு உதவுவர் உதவியவர்கள் என்று யாரும் கிடையாது.

மாமூல் யார் கொடுக்கிறார்களோ அவருக்கு தான் முன்னுரிமை என்ற ரீதியில் கிருஷ்ணமூர்த்தி காவல்துறை அதிகாரிகளை தனது பாக்கெட்டில் உள்ளவாறு நினைத்துக்கொண்டு தெனாவெட்டாக ஊரில் வலம் வந்து கொண்டுள்ளார் என்று பார்ப்பவர்கள் மற்றும் நன்கு விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Oplus_16777216

உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று கொக்கரிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இதனால் மனம் நொந்து வெந்து ஒரு நடைப்பிணம் போல நகரில் உலா வந்து கொண்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் தேவசகாயம் என்று சொன்னால் அது உண்மையிலும் உண்மை. இப்படி பல்வேறு தரப்பினரையும் மிரட்டி உருட்டி இவர் காரியம் சாதித்து வருகிறார் என்று சொன்னால் அதுதான் உண்மை. கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறாரோ அதை காவல்துறையில் உள்ளவர்கள் அப்படியே கேட்டு நடக்கின்றனர்.

இதோடு வேறு யாராவது மிரட்டினால் தனது மகள்களை கொண்டு புகாரை கொடுத்து அவர்கள் மீது ஏதாவது ஒரு வழக்குகளை பதிவு செய்து அவர்களை சின்னாபின்னம் ஆக்கி விடுவதாகவும் ஒரு தரப்பு புகார் கூறுகிறது. இதை நன்கு விவரம் அறிந்தவர்கள் தெளிவாக அறிவார்கள். காவல் துறையில் உண்மை எது பொய் எது என்று சீர்தூக்கி பார்த்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு நியாயம் வழங்க வேண்டியவர்கள் பொய் புகார் கொடுப்பவர்களை நம்பி செயல்படுகின்றனர்.

இவற்றை சொல்லி மாளாது. அப்படியே அவர் தனது விருப்பம் போல நடந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்காமலேயே மாவட்ட குற்ற பிரிவிற்கு மாறுதலாகி சென்று விட்டார் டிஎஸ்பி திருநாவுக்கரசு.

இந்த உண்மை ஒருநாள் வெளிவரும் என்று காத்துக் கொண்டுள்ளார் தேவ சகாயம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்ற கூற்றுக்கு ஏற்ப பொறுமை காத்து வருகிறார் தேவசகாயம்.

தனது வீட்டு பத்திரம் மற்றும் தனது ஆட்டோ ஆகியவற்றை இழந்தும் கூட இன்றுவரை பொருமை காத்து காவல்துறையை நம்பி நம்பி ஏமாந்து வருகிறார் இந்த தேவசகாயம். அவருக்கு கிடைக்க வேண்டிய ரூபாய் இரண்டு லட்சத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பெற்று தருவதற்கு ஒரு காவல்துறை அதிகாரி கூட தயாராக இல்லை என்பதற்கு அவர்களது விசாரணையின் நோக்கம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்களும் அவருடைய குணம் பற்றி நன்கு விவரம் அறிந்த பொதுமக்களும் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.இப்படி பல்வேறு உண்மைகள் இருந்தாலும் இவருக்கு இதுநாள் வரை நியாயம் கிடைக்காமல் இருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.

ஆதலால் கடலில் அலை எப்போது ஓய்வது. எப்போது மீன்பிடிப்பது என்பது போல கடலில் அலை ஓயுமா? தேவசகாயத்திற்கு நீதி கிடைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்றவற்றிற்கு ஏற்ப காவல்துறை நடந்தால் தேவ சகாயத்துக்கும் நீதி கிடைக்கும்.

தான் இழந்த ரூபாய் 2 லட்சத்தை கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து காவல்துறை அதிகாரிகள் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்று வரை இருந்து வருகிறார் தேவ சகாயம். தேவ சகாயத்தின் நம்பிக்கை நிறைவேறுமா?அல்லது நீரு பூத்த நெருப்பு போல நடக்காமல் அப்படியே போய்விடுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.அதுவரை நாம் காத்திருப்போம்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS