BREAKING NEWS

காவி உடை விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்.

காவி உடை விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்.

 

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம்

 

 “அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

 “தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது. இவர்கள் இந்து விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்துக்களை முடக்கினால்,

 

அவர்கள் பணியாற்ற மாட்டார்கள் என நிகழ்ச்சிகளுக்குத் தடை மற்றும் கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்களுக்கு மத்தியில், இந்த அரசு மீதுள்ள வெறுப்பு உணர்வால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியைச் சந்திக்கும்.

 

உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். கும்பகோணத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை அறநிலையத் துறை செய்து தரவேண்டும்.

 

இங்குள்ள புனிதகுளமான மகாமக குளத்தை சுத்தமாவும், தூய்மையாகவும் வைத்திருக்கத் தவறினால், இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

 

அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதில் உடன்பாடும் விருப்பமும் இல்லை.

 

இந்து முன்னணிக்கும், அவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )