கிராமசபை கூட்டம்,தேனி மாவட்டம் முத்தனம் பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம், முத்தனம் பட்டி கிராமத்தில்,மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் தலைமையில், நடைபெற்றது.
அக்டோபர் 2 மகாத்மாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம், முத்தனம்பட்டி கிராமத்தில், நடைபெற்ற கிரமசபை கூட்டத்தில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஆண்டிபட்டி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன்,
மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி, ஆண்டிபட்டி வட்டாட்சியர் யசோதா,மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஷியாமளா, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அண்ணாதுரை,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் உள்ளிட்ட, அரசுத்துறை அலுவலர்களும், தமிழக அரசின்நலத்திட்டங்கள் குறித்தும் பொது மக்களின் கோரிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளும்,
விவாதங்களும் நடைபெற்ற இக்கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், மக்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்ற நிகழ்வு அனைத்து பொதுமக்களையும் மகிழ்வடைய, நெகிழ்விடையச் செய்தது.
ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரும்,ஆண்டிபட்டி ஒன்றிய பெருந்தலைவரும், நீரில் பூத்த நெருப்பாக ,எதிரும் புதிருமாக, மக்களுக்கு நலத்திட்டங்களை முந்திக்கொண்டு யார் செய்வது என்று போட்டி போட்டு பேசி, பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர்.