கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 10-இலட்சம் மதிப்பீட்டில் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், S.காரைக்குடி ஊராட்சியில் கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 10-இலட்சம் மதிப்பீட்டில் ஆன பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப.மதியரசன் அவர்களும், ஒன்றிய கழக செயலாளர் திரு.வெங்கட்ராமன் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் திரு.குழந்தைபாண்டி அவர்களும், பள்ளி தலைமையாசிரியர் அவர்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS DmkS.காரைக்குடி ஊராட்சிஅரசியல்இளையான்குடி ஒன்றியம்குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும்சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார்சிவகங்கை மாவட்டம்தலைப்பு செய்திகள்