BREAKING NEWS

கிராமப்புற மக்களுக்கு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கிராமப்புற மக்களுக்கு  கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

செய்தியாளர் வி ராஜா.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில் கிராமப்புற மக்களின் குடும்பத்தில் ஒன்றாக கருதப்படும் கால்நடைகளுக்கான கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.

 

 

நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதனன் ரெட்டி அவர்களும் முன்னிலை வகித்தனர்.

 

 

மேலும் நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன் அவர்களும், கால்நடை மருத்துவர்களும், துறை சார் அதிகாரிகளும், நகரக் கழகச் செயலாளர் அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )