BREAKING NEWS

கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.

கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்த மாதிரி இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் பேட்டி.

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடைப்பெற்றது.

 

ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்த வகையில் கும்பகோணம் வட்டம் சந்தனாபுரத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

 

 

அப்போது கையோடு கைகோர்ப்போம் என ராகுல் காந்தியின் கருத்துக்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி ஆர் லோகநாதன் தலைமை தாங்கினார். மேயர் சரவணன்,மாநகர தலைவர் மீர்சாவூதீன்,

 

 

வட்டார தலைவர் மணிசங்கர்,மாநில பொது குழு உறுப்பினர் பாலதண்டாயுதம், மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுங்கள் வழங்கி கூறியதாவது:-

 

தமிழ்நாடு முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றி பெறுவார்.

 

உலக நாடுகளில் ஏற்படும் குழப்பத்திற்கு மேலாக அதிமுகவில் மாபெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பத்திற்கு காரணம் பாஜக தான் அவர்களின் சித்தாந்தம் அருகில் இருப்பவர்களின் செயல்பாடுகளை முடக்குவது.

 

இதுபோல்தான் மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி வீழ்த்தியது. இதுபோல் தமிழ்நாட்டிலும் அதிமுகவை பாஜக வீழ்த்தி விடும்.

 

 

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியது போல் பாஜகவை கவனத்துடன் அணுகுகிறோம் என்று கூறியுள்ளார்.

 

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்த மாதிரி இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். தமிழ்நாடு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வர மாட்டார்.

 

விவசாயத்திற்கு தமிழக அரசு தனி பட்ஜெட் அறிவித்தது போல் தற்போது நிலவும் டெல்டா விவசாயிகளின் கவலைகளையும் கை கொடுப்பார் என அவர் தெரிவித்தார்.

 

முன்னதாக கும்பகோணம் திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

 

CATEGORIES
TAGS