குத்தாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், வைரவன், இராமகுரு, ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
தொடர்ந்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது இந்திய பெரு முதலாளிகளுக்கும்,ஸகார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக குத்தாலம் பேருந்து நிலையத்தில் தேசம் தழுவிய பிரச்சாரம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கவில்லை,உரத்திற்கான மானியத்தை கடந்தாண்டு விட இந்த ஆண்டு குறைவாக ஒதுக்கி உள்ளது, 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30,000 கோடி ரூபாய் குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவுக்கு வழங்கி வந்த மானியத்தையும் குறைத்துள்ளதாகவும் கூறி இந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.