BREAKING NEWS

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிமன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார் துணைத்தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார்.

 

பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் வரவேற்றார் இந்த கூட்டத்தில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பேசி கோரிக்கை வைத்தனர்.

 

அப்போது தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் இதில் பேரூராட்சி அலுவலர்கள் கல்யாண சுந்தர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS