குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு குத்தாலம் தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் கரிம்கான் ஐந்தாம் நிலை கருப்பு பட்டயம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு குத்தாலம் தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் கரிம்கான் ஐந்தாம் நிலை கருப்பு பட்டயம் ICMR YOGA CERTIFICATION COACH TKSA FOUNDER அவரது தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகா செய்தல் சிலம்பம் சுற்றுதல் ரிப்பன் சுற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
பின்னர் தருமை ஆதினத்திற்குச் சொந்தமான திருத்துருத்தி எனப்படும் குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் தருமை ஆதின நட்சத்திர குருமணிகளின் உத்தரவுபடி நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் நாள் சந்திரசேகரர் குதிரை வாகனத்தின் எழுந்தருளி அருள்பாலித்தார் அதனைத் தொடர்ந்து,
அம்பு போடும் நிகழ்வானது 30 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.