கும்பகோணத்தில் போலீசாருக்கு மருத்துவ முகாம்.
தஞ்சாவூர் மாவட்டம்:
கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத் தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
தஞ்சை தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் கும்பகோணம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் மற்றும் அவர்க ளது குடும்பத்தினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
மருத்துவ முகாமில் மருத்துவ உபகரணங்களின் பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் விலையில்லா வகையில் வழங்கப்பட்டது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS கும்பகோணம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத் தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம்மருத்துவம்