BREAKING NEWS

கும்பகோணம் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வாழ்வு உறுதி சான்றிதழ் இணைய வழியில் சமர்ப்பிக்கும் முகாம் .

கும்பகோணம் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வாழ்வு உறுதி சான்றிதழ் இணைய வழியில் சமர்ப்பிக்கும் முகாம் .

தமிழக அரசு ஓய்வுதியர்களுக்கு ஓய்வூதியம் பெற இந்த வருட வாழ்வு உறுதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை அடுத்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளை கோயில் அருகில் உள்ள கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெற இந்த வருட 2022- 23 வாழ்வு உறுதி சான்றிதழ் (லைப் சர்டிபிகேட்) இணையவழியில் சமர்ப்பிக்க கும்பகோணம் வட்ட கிளை சார்பில் ஓய்வூதியர்களுக்கு வாழ்வு உறுதி சான்று சமர்ப்பிக்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு முகாம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான அரசு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்வு உறுதி சான்றை கணினி மூலம் சமர்ப்பித்தனர்.

இம்முகாமிற்கு கும்பகோணம் வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் முகாமை விளக்கி பேசினர் முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் துணைவியாரும் முன்னாள் பட்டதாரி ஆசிரியரும் அரசு ஓய்வூதியருமான புவனேஸ்வரி முகாமை தொடக்கி வைத்தார்.

முகாமில் மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், ஜி கண்ணன், வெங்கடேசன், தமிழ்ச்செல்வி கிளை செயலாளர் பக்கிரி சாமி உள்ளிட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்

மேலும் இம்முகாம் தினந்தோறும் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளை கோயில் அருகில் உள்ள கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெறும் எனவும் ஓய்வூதிர்கள் பயனடைமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )