BREAKING NEWS

கும்பகோணம் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி அழைப்பு.

கும்பகோணம் வட்டாரத்தில் 100  சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள்.  பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர்  தேவிகலாவதி   அழைப்பு.

கும்பகோணம் வட்டாரத்தில் 100
சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி
அழைப்பு.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் ½ மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

விதை கிராம திட்டத்தில் ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகள், கோ.ஆர்.51, டிபிஎஸ்-5,மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது . மேலும் மாற்று பயிர்வகை சாகுபடியினை செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணுட்ட உரங்கள் வழங்கப்படுகிறது .

அதே போல சிறுதானிய பயிர்களின் சாகுபடி நாளுக்கு குறைந்து வருவதால் சாகுபடி பரப்பினை அதிகரித்து அதன் 50 சதவீதம் மானியத்தில் முக்கியத்துவம் அறியும் வகையிலும் விதைகள் மற்றும் நுண்ணுட்ட உரங்கள் வழங்கப்படுகிறது .

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )