கூடங்குளம் அருகே இருக்கன்துறை கிராமத்தில் கல்குவாரி அமைக்க ராதாபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம் . கூட்டத்தில் இரு தரப்பினர் கடும் வாக்கு வாதம் . போலீசார் சமர பேச்சுவார்த்தை.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை கிராமத்தில் தனியார் நிறுவனம் 3 கல்குவாரி அமைக்க விண்ணப்பம் செய்துள்ளது. அதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ராதாபுரம் மணியம்மை மகாலில் வைத்து நெல்லை மாவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது கண் துடைப்பு ஆகவே கருத்து கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் , நாம் தமிழர் கட்சியினர் கருப்பு பேஜ் அணிந்து வந்தனர்.
பாஜக , நாம் தமிழர் , விடுதலை சிறுத்தை , கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுற்று சூழல் ஆர்வலர் முகிலன் ஆகியோர் கல்குவாரிக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் எதிர் தரப்பினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமர பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் இரு தரப்பு கருத்துக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.