BREAKING NEWS

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு புதுப்பித்தல் கேட்டு மனுக்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் நேரடியாக நல வாரியத்தில் புதுப்பித்தலை துவங்க வேண்டும், நிலுவையில் உள்ள கோப்புகள் உடனடியாக பரிசினை செய்து உரிய பண பலன்களை வழங்கிட வேண்டும், கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

மேலும் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவை தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாத ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்கு வலியுறுத்தி கோஷாமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் சேது, வெள்ளைச்சாமி, குருநாதன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )