கோவில்பட்டியில் சாக்கடை ஓடையில் மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகர் 6வதுதெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கார்த்திக்( 40) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்,

இந்நிலையில் இன்று வேலைக்குச் செல்லாமல் அதிகமாக மது அருந்திவிட்டு கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள சாக்கடை ஓடையில் சிறுநீர் கழிக்கு சென்ற போது சாக்கடை ஓடையில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

உடனே தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு சென்று கிழக்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர், இது குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திக்கு திருமணம் ஆகவில்லை.
