கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.
கோவில்பட்டி அருகே கல்லூரணியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ விநாயகர் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ,கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முருகன், ஜெயபிரகாஷ், உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.