கோவில்பட்டி அருகே உணவு கழிவு நீர் அருந்திய ஆடுகள் _நுரை தள்ளி சம்பவ இடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி.

கோவில்பட்டி அருகே உணவு கழிவு நீர் அருந்திய ஆடுகள் _நுரை தள்ளி சம்பவ இடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கால்நடைத்துறை மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பூசனூர் கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் முனியசாமி (62) இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் அவரது மனைவி சுப்புலட்சுமி 40க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வந்துள்ளார் தினந்தோறும் காலையில் காலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து உணவு கழிவு நீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு கொடுப்பது வழக்கம் அதேபோல் இன்றும் கழிவு தண்ணீர் எடுத்து 40 ஆடுகளுக்கு கொடுத்துள்ளனர்.
முதலில் தண்ணீர் பருகிய 15 வெள்ளாடுகள் வாயில் நுரை மற்றும் ரத்தம் வந்து கீழே சுருண்டு விழுந்து இறந்தது.
இதுகுறித்து குளத்தூர் காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதனை செய்து உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர்.