BREAKING NEWS

கோவில்பட்டி அருகே ஸ்ரீ வீரஜக்கதேவி திருக்கோயிலில் 23 ஆம் ஆண்டு கொடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கோவில்பட்டி அருகே ஸ்ரீ வீரஜக்கதேவி திருக்கோயிலில் 23 ஆம் ஆண்டு கொடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.வள்ளிநாயகபுரத்தில் உள்ள தொட்டியகுல தொழுவ நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரஜக்கதேவி திருக்கோயிலில் 23 ஆம் ஆண்டு கொடை விழா கடந்த 17 ஆம் தேதி அன்று நாட்டுகால் நடுதல் திருவிழா நடைபெற்றது‌.

இத்திருவிழாவில் பால்குட ஊர்வலம், பூப்பெட்டி அலங்கார ஊர்வலம், சாமக்கொடை நடைபெற்றது‌‌. இன்று மாணவிகள் பெண்கள் கும்மிப்பாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கும்மிப்பாட்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே கே.முத்துசாமிபுரத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் வைகாசி மாசம் கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் வினோபாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,

கடம்பூர் நகர செயலாளர் வாசமுத்து,கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி தலைவர் கருப்பசாமி, வர்த்தக அணி தலைவர் காமராஜ், வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்பராஜ்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,கிளைச் செயலாளர்கள் பாலமுருகன்,பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )