BREAKING NEWS

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி அருள்மிகு  ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 1‌ ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் காப்பு கட்டுதல் கும்பத்தில் தீர்த்தத்தை நிரப்பப்பட்டு கோயில் வலம்வந்து யாகசாலையில் எழுந்தருள மற்றும் யாகசாலையில் தீர்த்துக் குடங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று பார்த்தசாரதி அய்யங்கார் தலைமையில் இன்று திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகருக்கு 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் விநாயகர் ரமேஷ், வெங்கடேஷ் சென்னகேசவன்,டாக்டர் வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு தலைவி சத்யா, நகர செயலாளர் விஜய பாண்டியன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எட்டயபுரம் நகரக் கழகச் செயலாளர் ராஜகுமார், மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் செல்வக்குமார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,முருகன், கோபி,பழனிகுமார், மற்றும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள் தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் குருநாதன், செயலாளர் செல்வம், துணைச் செயலாளர் அப்பாசாமி, பொருளாளர் ராஜேந்திர மாரியப்பன்,துணைத் பொருளாளர் பாலகணேஷ், உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )