BREAKING NEWS

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து வருவாய் துறை அமைச்சர் அவதூறு பேச்சு – தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருகை புரிந்தால் அதிமுக சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தபடும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது கூறுகையில் :

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை..

காட்டுபன்றியினால் சவலப்பேரி,கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசத்தல் பயிர்கள் சேதம் பல முறை மாவட்ட ஆட்சியர் இடம் தெரிவித்து எந்தவொரு நடவடிக்கை இல்லை..

 

 

எட்டு வழி சாலை திட்டம் விவகாரத்தில் இரட்டை வேடத்தை போடுகின்றனர் திமுக அம்மா மறைவிற்கு அதிமுக அழிந்து விடும் என்று கூறிவரும் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்தார். அதிமுக எடப்பாடியர் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது

அடுத்து எந்த நேரத்திலும் தேர்தல் அதிமுக தான் வெற்றி பெறும்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யபடும் என்று அன்புமணி கூறியுள்ளார். எனவே தொடர்ந்து பாமக அதிமுக கூட்டணியில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அதிமுக தலைமையில் தான் கூட்டணி பாமக,மதிமுக, அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு எல்லாம் அங்கீகாரம் கொடுத்தது அதிமுக.

அண்ணாமலை பத்திரிகையாளர் இடம் நடந்து கொள்ளும் விவகாரம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். கே.எஸ்.ஆர் அமைச்சர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியது அவரை அவரே அசிங்க படுத்தி கொண்டார்.

ஆசிட் வீச்சின் போது தனது முகம் பாதிக்கப்பட்ட போது நேரடியாக சென்று அவரை பார்த்து உரிய சிகிச்சை அவரை உயிரை காப்பாற்றியது ஜெயலலிதா தான் விரைவில் கே.கே எஸ் ஆரை மருத்துவமனையில் சென்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மறைந்த தலைவர் பற்றிய பேசிய மிகவும் கண்டனத்துக்கு உரியது. அவர் தான் ராட்ஷ்சா கூட்டத்தில் சேர வேண்டும்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருவாய் துறை அமைச்சர் வந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கூறினார்.

CATEGORIES
TAGS