கோவை சரக டி.ஐ.ஜி M.S.முத்துசாமி; பவானி DSP முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

கோவை சரக டி.ஐ.ஜி முனைவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் பவானி DSP அலுவலகம் மற்றும் பர்கூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.
இவ்வலுவலகம் மற்றும் காவல் நிலையத்தின் அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து பாராட்டினார்.
காவல் துறை பொதுமக்களின் நண்பனாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப நலன் பற்றி விசாரித்தார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட SP டாக்டர். V. சசிமோகன், இ.கா.ப., சத்தி ASP, அய்மன் ஜமால், இ.கா.ப., கோபி DSP A. சியாமளா தேவி மற்றும் பவானி DSP, G. அமிர்தவர்ஷினி மற்றும்,..
பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.