சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த அரசிராமணி பேரூராட்சி 2 வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர், காட்டக்கவுண்டனூர் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது.
இதற்கிடையே, கட்டிடம் பழுதடைந்ததால், புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இன்று சங்ககிரி சட்டமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
இந்த நிகழ்வில், சங்ககிரி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.சுந்தரராஜன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடேஷ், பேரூராட்சி கவுன்சிலர், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES சேலம்
TAGS அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.சுந்தரராஜன்அரசியல்அரசிராமணி பேரூராட்சிசங்ககிரி தொகுதிசேலம் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்ரூ.15 லட்சம் புதிய ரேஷன் கடை கட்டிட பூமி பூஜை