சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
திருநெல்வேலி தனி நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான, தலைவன் கோட்டை பட்டதாரியான விஜயபாண்டின் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் உள்ள கிராமமான தலைவன் கோட்டை, ஈச்சம்பொட்டல்புதூர், நொச்சிகுளம், ஆண்டார்குளம், வடமலாபுரம், நகரம் துரைச்சாமிபுரம்,
முள்ளிக்குளம், தாருகாபுரம் பாறைப்பட்டி நெல்கட்டும் செவல், பச்சேரி, அரியூர், கீழப்புதூர் சங்கனாப்பேரி, மலையடிக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்,பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு மாவட்ட பொருளாளர் இல சரவணன் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.