BREAKING NEWS

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சார்நிலை கருவூலம் அருகே திறந்தவெளியில் மர்ம நபர்கள் காலியான ஊசிகள், மருந்து பாட்டில்கள், ஆகியவற்றை ஒரு மூட்டையில் கட்டி அதை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

 

 

இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதாரகேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டியவர்களை கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS