BREAKING NEWS

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காற்றாலைகளில் காப்பர் வயர்களை திருடுபோவதாக சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய போலீசாருக்கு புகார் வந்தது.

 

 

இதனை அடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் படி சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் இன்ஸ்பெக்டர் மாதவன் எஸ் ஐ கள் சூசை ராமசுப்பு காசிப்பாண்டி மற்றும் காவலர்கள் முனிராஜ் அனில் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளியை தேடி வந்தனர்.

 

 

இந்நிலையில் அருப்புக்கோட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக்செல்வம்  கலிங்கப்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்த முத்து மகன் முருகன்  

 

அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மதுரை வீரன் மகன் கார்த்திகை செல்வன் கலிங்கப்பட்டி அருகேயுள்ள தெற்கு மலையடிப்பட்டி, மேலத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் முத்துராசு ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து சுமார் 850 கிலோ காப்பர் ஒயர்கள் மற்றும் காப்பர் தகடுகளை திருடி சென்றது தெரியவந்தது இதன் மதிப்பு ரூபாய் 7,22,500 ஆகும்,

 

 

 இதனை அடுத்து ஐந்து பேரையும் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் மேலும் திருடு போன காப்பர் வயர்கள் மற்றும் காப்பர் தகடுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

 

திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் நீதிபதி 5 பேரையும்சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )