BREAKING NEWS

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கனவே சிவனடியார்கள் தானம் கொடுத்த ஏராளமான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடை கொண்ட 18 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கிரேன் மூலம் சிவலிங்கத்தின் பீடம் மற்றும் லிங்கம் நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு மலர் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

https://youtu.be/9sN1EC1k8bU

 

CATEGORIES
TAGS