BREAKING NEWS

சமயபுரம் சுங்கச்சாவடியில் குட்கா பொருட்கள் கடத்திய வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். குட்கா, ஸ்கூட்டி வாகனம் பறிமுதல்.

சமயபுரம் சுங்கச்சாவடியில் குட்கா பொருட்கள் கடத்திய வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். குட்கா, ஸ்கூட்டி வாகனம் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது குட்கா பொருட்கள் கடத்தி வந்த வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். ஸ்கூட்டி வாகனம், 4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.

சமயபுரம் சுங்கச்சாவடியில் சமயபுரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்கூட்டியில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

 

 

அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது அவர் நான்கு கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

 

 

பின்னர் அவரை விசாரணை செய்ததில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டம், கேசவப்பர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான கரம் பட்டு என .தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து 4 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஸ்கூட்டி வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

 

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் குட்கா பொருள்கள் எப்படி வந்தது? எங்கு கடத்திச் செல்கிறார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS