BREAKING NEWS

சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.

சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.

செய்தியாளர் வி.ராஜா,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா 3-ம் கட்டமாக இளையான்குடி ஒன்றியம், பெரும்பச்சேரி கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 

நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுடன் பல்லாங்குழி விளையாடியும், அவர்களுடன் ஒன்றாய் உணவு அருந்தினார் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப.மதியரசன் அவர்களும், குழந்தை வளர்ச்சிப் பணி திட்ட அலுவலர் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் மு.சாவித்திரி முருகன் அவர்களும்,

 

 

வட்டார மருத்துவ அலுவலர் அவர்களும், அங்கன்வாடி பணியாளர்களும், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்களும், வார்டு கவுன்சிலர்களும், அரசுத்துறை அதிகாரிகளும், கர்ப்பிணிப் பெண்களும்,பொதுமக்களும்‌ கழக முன்னோடிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )