சமூக ஆர்வலர் குற்றாலம் வீரமணிக்கு பாராட்டு

குற்றாலம் – பசி போக்கும் தளம் தென் பொதிகை டிரஸ்ட் சார்பில் ஆதரவற்ற முதியவர் உடல் நல்லடக்கம் குற்றாலம் காவல்துறையினர் உதவியோடு ;-
தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலை விபத்தில் ஒருவர் கடந்த சில தினத்திற்கு முன்பு முதியோர் இறந்துள்ளர்
உறவினர் யார் என இன்று வரை தெரியவில்லை கடந்த ஆறு நாட்களாக
தென்காசி அரசு மருத்துவமனையில் முதியவர் சடலம் ஆதரவற்ற நிலையில் இருந்து வந்துள்ளது .
இறந்த முதியவரை நல்லடக்கம் செய்வதற்கு காவல்துறையினர்
பசிப்போக்கும் தளம் தென்பொதிகை நிர்வாக குழுவுக்கு தகவல்
தெரிவிக்கபட்டது. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் எம். மாரியப்பன் ஆலோசனையின் பெயரில் அந்த முதியவரை குற்றாலம் பேரூராட்சி மயான கூடத்தில் குற்றாலம் காவல் துறையை சார்பாக சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் பெருமாள்
தலைமை காவலர் ஜெயக்குமார்,
பசிப்போக்கும் தளம் தென்பொதிகை
நிர்வாக குழு உறுப்பினர் வீரமணி
ஆகியோர் அடையாளம் தெரியாத முதியவர் குற்ற எண் 256/25 U/S அரசு மருத்துவமனை சவக்கிடங்களிருந்து பிரேத பரிசோதனை முடிந்து பசி போக்கும் தளம் தென் பொதிகை டிரஸ்ட் சார்பில் முதியவர் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இந்த நிகழ்வினை பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்