சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் குளத்தின் அருகே முட்புதரில் சாக்கு பையில் ஆண் குழந்தை பிணமாக கடப்பதாக திருவேங்கடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அப்போதைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
முட்புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை சாக்குப் பையில் வைத்து வீசி சென்ற மர்ம நபர்கள் யார் குழந்தையின் தாய் தகப்பன் யார் எதற்காக குளத்தின் முட்புதரில் வீசி சென்றனர் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவேங்கடம் போலீசார் மேலும் சம்பவம் குறித்து பெருங்கோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.