BREAKING NEWS

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு.

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு.

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றிய கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ..

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா வி எஸ் கோட்டை இப்பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக கோபாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார் இவரிடம் மார்க்கம் பட்டி ஊராட்சி தலைவர் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மார்க்கம் பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் தண்ணீர் வெளியே செல்லும் வாய்க்காலில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

 

இதனால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது ஆகவே கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியது. என அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊராட்சி தலைவர் ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட மார்க்கம்பட்டி குலத்துக்குச் சென்று அங்கு ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

 

அப்பொழுது ஆக்கிரமிப்பு செய்த மார்க்கம் பட்டியை சேர்ந்த செல்வம் திருப்பதி மூர்த்தி ஆகிய மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அங்கிருந்து கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்குச் சென்ற பிறகும் அங்கு வந்து கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சாணார்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் புகார் மனு அளித்தார் அதில் அரசு அதிகாரியை பணி செய்ய விடவில்லை மேலும் 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர் ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு வழங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )