சிலுக்குவார்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சிலுக்குவார்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் பொதுமக்கள் இணைந்து சிலுக்குவார்பட்டி யில் தற்போது பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிலக்கோட்டை தாலுகா செயலாளர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிலுக்குவார் பட்டி கிராம நிர்வாக அதிகாரியை உடனடியாக மாற்றக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்டச் செயற்குழு பாண்டி, தாலுகா துணைச்செயலாளர் சகாயம், தாலுகா குழு உறுப்பினர்கள் காசிமாயன், ஆல்பர்ட் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.