BREAKING NEWS

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.

ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓ.பி.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் நேரில் சந்திப்பு. சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு 7 கிலோவில் வெண்கல வேல் வழங்கினர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து வருகின்றார்.

 

இதில் சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வினோ ஜி தலைமையில் மாநகர், நகர், புறநகர், ஒன்றியம், பேரூர் மற்றும் கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் என அனைத்து பிரிவுகளுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து சால்வை, பூ மற்றும் பழக்கூடை கொடுத்து வாழ்த்து பெறுகின்றனர்.

 

இதில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி செயலாளர் பழனி ஏழு கிலோ எடையிலான வெண்கல வேலை வழங்கி வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டனர். இந்த சந்திப்பின் போது அதிமுக (ஓ.பிஎஸ் அணி) செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் உடனிருக்கின்றார்.

Share this…

CATEGORIES
TAGS