செங்கல்பட்டில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து. மனைவி சம்பவ இடத்திலேயே பலி..கணவன் படுகாயம்.

சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சிதா (25) இவர் தாம்பரத்தில் தனியாக அறை எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார்.
அதேபோல் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சுராபாத்கான். (27)இவரும் தாம்பரம் பகுதியில் தனியாக அறை எடுத்து ஓலா நிறுவனத்தில் ஓலா டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்துமதத்தை சேர்ந்த ரஞ்சிதாவும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சுராபாத்கானும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.
ரஞ்சிதா அவரது வீட்டில் ஒரே வாரிசு என்பதால் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரஞ்சிதாவிடம் பேசியபோது தான் சுராபாத்கான் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என தனது பெற்றோரிடம் கூறியதும் ரஞ்சிதாவின் பெற்றோர் சுராபாத்கானின் பெற்றோரும் பேசி இருதரப்பினரின் ஒப்புதலோடு கடந்த இரண்டு மாதம் முன்பு சங்கராபுரம் பகுதியில் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் தாம்பரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சென்னையில் இருந்து சங்கராபுரம் செல்வதற்காக ரஞ்சிதா தன் கணவருடன் காரில் சங்கராபுரம் செல்லும் வழியில் செங்கல்பட்டு பழவேலி பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அதிவேகமாக காரை ஓட்டிவந்த சுரபாத்கானின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையின் நடுவே போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது ஏறி மரத்தில் மோதி ரஞ்சிதா சம்பவ இடத்திலிலேயே பரிதாபமாக பலியானார்.
சுராபாத்கான் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரஞ்சிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் கணவன் கண்முன்னே தனது காதல் மனைவி இறந்த சம்பவம் உறவினர்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கை ஷங்கர்